search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச எல்லைக்கோடு"

    ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லைக் கோட்டின் அருகில் சந்தேகத்துக்குரிய விதத்தில் நடமாடிய வங்காளதேசத்தை சேர்ந்த 3 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்முவில் உள்ள ரன்பீர் சிங் புரா என்ற பகுதியில் சர்வதேச எல்லை கட்டுப்பாடு கோடு அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த இரு தினங்களாக ஆட்கள் நடமாட்டம் உள்ளதாக எல்லை பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வங்காளதேசம் நாட்டை சேர்ந்த 3 பேர் சுற்றித் திரிவதை கண்டனர். தொடர்ந்து அவர்களை கைது செய்த எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை உள்ளூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர்கள் சுமன்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த மொகமது ஜகாகிர்(18), மொகமது அலி (18) மற்றும் சில்ஹெட் மாவட்டம் ஜத்வாபரியை சேர்ந்த அப்துல் கரீம் (20) என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 2 ஸ்மார்ட் போன்கள், இந்திய ரூபாய்களும் பறிமுதல் செய்யப்பட்டன. #Tamilnews
    ×